வந்தவாசி அருகே வட மாநிலத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் புதிய மின்பாதைக்கான உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதில் பணிபுரிந்த மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி புஷால்போல் (25) என்பவர் அந்தக் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில், தண்ணீர் செல்லும் இரும்புக் குழாயில் மின்வயரில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
தகவலறிந்த பொன்னூர் போலீஸார் சம்பவ இடம் சென்று புஷால்போலின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.