டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: 3,127 பேர் எழுதினர்

திருவண்ணாமலையில் 3 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வை 3 ஆயிரத்து 127 தேர்வர்கள் எழுதினர்.

திருவண்ணாமலையில் 3 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வை 3 ஆயிரத்து 127 தேர்வர்கள் எழுதினர்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையாளர் (வணிக வரி), மாவட்டப் பதிவாளர் (கூட்டுறவுச் சங்கங்கள்), மாவட்டப் பதிவாளர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் உள்ளிட்ட 139 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரில் மட்டும் 3 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வை 3 ஆயிரத்து 127 தேர்வாளர்கள் எழுதினர்.
 ஆட்சியர் ஆய்வு: திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கோட்டாட்சியர் ஸ்ரீதேவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com