திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை நகர திமுக சார்பில், 660 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை வகித்தார்.
நகர நிர்வாகிகள் பி.கே.ஆறுமுகம், பச்சையம்மாள் யேசு, குட்டி க.புகழேந்தி, இல.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன் வரவேற்றார். மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 660 பயனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கிப் பேசினார். விழாவில், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மருத்துவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.