செங்கம் அருகே விவசாயக் கிணற்றில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத இளைஞர் சடலம் மீட்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த ஆண்டிப்பட்டி கிராமத்தில் விவசாயி பட்டுக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர் வியாழக்கிழமை சடலமாகக் கிடந்ததைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.