செங்கம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கம், தளவாநாய்க்கன்பேட்டை, பரமனந்தல், நேரு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்குச் சாவடி மையங்களில் மின்சாரம், குடிநீர், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதிகள் குறித்தும், கட்டடத்தின் மேற்கூரை பழுது இல்லாமல் உள்ளதா என்பது குறித்தும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச் சாவடி மையங்களில் உடனடியாக தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா உத்தரவிட்டார்.
உடன், பயிற்சி ஆட்சியர் பிரதாப், செங்கம் ஆணையாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இருந்தனர்.