வேட்டவலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார். வேட்டவலம் காந்தி சிலை எதிரில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியில் அலுவலக எழுத்தர், துப்புரவு மேற்பார்வையாளர், வரித்தண்டலர், துப்புரவுப் பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரும் வாக்களிப்பது அவசியம். வாக்களிக்க பணம் பெறக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.