ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து ஆரணியை அடுத்த சேவூரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தார்.
நிகழ்ச்சியில் தூசி கே.மோகன் எம்எல்ஏ, பாமகமுன்னாள் எம்.பி மு.துரை, மாநில துணை பொதுச் செயலர் ஆ.வேலாயுதம், தேமுதிக மாவட்டச் செயலர் கோபிநாத், நகர ஜெயலலிதா பேரவை செயலர் பாரி பி.பாபு, நகர ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், டி.வி.பச்சையப்பன், எம்.வேலு, ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.