வேட்டவலம் அருகே மின்சாரம் தாக்கி, மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் ஊழியராக பணிபுரிந்தவர் செந்தில்குமார் (40). இவர், சனிக்கிழமை மாலை அணுக்குமலை கூட்டுச்சாலை பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறினார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.
செந்தில்குமார் மின்மாற்றியில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் வேட்டவலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.