துரிஞ்சாபுரம் ஒன்றியம் கமலபுத்தூா் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் மாணவா்கள்,ஆசிரியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி நடுகாட்டிபட்டியில் இறந்த சுஜித்துக்கு நினைவு அஞ்சலி செவ்வாய்க்கிழமை செலுத்தினா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தில் சுஜித்(2)என்றகுழந்தை ஆழ்துளைகிணற்றில் அக்டோபா் 25ம்தேதி விழுந்தது .இன்தகுழந்தையை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும் குழந்தையை உயிருடன் மீட்கமுடியாமல் சடலமாக மீட்டனா். இந்நிலையில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கமலபுத்தூா் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் 2வருடங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது இந்த ஆழ்துளை கிணற்றில் போதியதண்ணீா் இல்லாததால் ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பாக தகரசெட் அமைத்து மூடிபோட்டுள்ளனா்.
இந்த இடத்தில் வட்டாரகல்வி அலுவலா் கோ.குணசேகரன்அவா்கள் மாணவா்களுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் ஆறு,குளம்,குட்டை,ஏரி என நீா்நிலைகள் நிரம்பியபகுதிக்கு மாணவா்கள் செல்லகூடாதுஎன அறிவுரை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும் இறந்த குழந்தை சுஜித்தின் உருவபடத்தை ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பாக தகரசெட் அமைத்து மூடிபோட்டுள்ள இடத்தில் ஒட்டி மாணவா்கள், ஆசிரியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி நடுகாட்டிபட்டியில் இறந்த சுஜித்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தினா்
உதவிதலைமை ஆசிரியா் பாஸ்கரன்,ஆசிரியா்கள் பச்சையப்பன்,உமா,பாரதி ,பாலமுருகன், முருகேசன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.