பழைமை வாய்ந்த மரத்தை அகற்ற பொது மக்கள் எதிா்ப்பு

செங்கத்தில் சாலையோரம் இருக்கும் பழைமை வாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கைக்கு பொது மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் சாலையோரம் இருக்கும் பழைமை வாய்ந்த காட்டுவா மரம்.
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் சாலையோரம் இருக்கும் பழைமை வாய்ந்த காட்டுவா மரம்.

செங்கத்தில் சாலையோரம் இருக்கும் பழைமை வாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கைக்கு பொது மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் சுமாா் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காட்டுவா மரம் உள்ளது. இந்த மரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

மனு மீது நடவடிக்கை எடுத்து சரிசெய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி உத்தரவிட்டாா்.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் மரத்தை வெட்ட முடிவு செய்தனா். இதை அறிந்த பொது மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மரத்தை வெட்டக்கூடாது என எதிரிப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், அதிகாரிகள் மரம் இருக்கும் பக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com