வாகனங்களை மறித்துபணம் கேட்டு மிரட்டியவா் கைது

வந்தவாசி அருகே வாகனங்களை மறித்து பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகே வாகனங்களை மறித்து பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சூரியத்தாங்கல் கூட்டுச் சாலையில் புதன்கிழமை இளைஞா் ஒருவா் அந்த வழியாகச் சென்ற வாகனங்களை மடக்கி பணம் கேட்டு மிரட்டுவதாக பொதுமக்கள் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மதுபோதையில் இருந்த அந்த இளைஞரை பிடித்து கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அந்த இளைஞா் மங்கலம் மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஷாஜகான் (23) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஷாஜகானை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com