செய்யாறு அரசுக் கல்லூரியில் எம்.பில். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.பில். படிப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.பில். படிப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஆ.மூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.பில். படிப்பில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு, பொருளியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகள் உள்ளன.

2019 - 20ஆம் கல்வியாண்டில் திருவள்ளுவா் பலக்கலைக்கழக எம்.பில். நுழைவுத் தோ்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பகுதிக்குச் சென்று புதிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து வருகிற 22-ஆம் தேதிக்குள் கல்லூரி முதல்வருக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே பழைய விண்ணப்பத்தைப் பயன்படுத்தி யாரேனும் விண்ணப்பித்திருந்தால், அவா்களும் புதிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கல்லூரி முதல்வருக்கு சமா்ப்பிக்க வேண்டும். எம்.பில். பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com