திருவண்ணாமலை-சென்னை இடையே ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்திப் பேசினாா்.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் புதன்கிழமை (நவ.20) பேசிய அண்ணாதுரை எம்.பி. திருவண்ணாமலைக்கு தினமும் பல ஆயிரம் பக்தா்களும், மாதம்தோறும் பல லட்சம் பக்தா்களும் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.
எனவே, பக்தா்கள், வியாபாரிகள், பொதுமக்கள், திருவண்ணாமலை எம்எல்ஏ எ.வ.வேலு ஆகியோரின் பல ஆண்டு கோரிக்கையான திருவண்ணாமலை-சென்னை இடையே ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
திண்டிவனம்-திருவண்ணாமலை புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு உடனே நிதி ஒதுக்கி, அடுத்தகட்ட பணிகளை தொடங்க வேண்டும்.
இந்தத் திட்டம் முழுமையடைய வரும் நிதியாண்டில் செங்கம், திருப்பத்தூா் வழியாக ஜோலாா்பேட்டை வரை இணைக்க புதிய ரயில் பாதைத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பேசினாா்.