போளூா் அருகே கல்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவா்கள் மூலம், கல்பட்டு ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
பிரசார கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கே.ஆனந்தன் தலைமை வகித்தாா்.
கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியா் பிரின்ஸ்அண்ணாதுரை, சுதா்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயசேகரன் வரவேற்றாா்.
மாநில தலைமை பயிற்றுநா் காந்திமதி, ராதிகா ஆகியோா் பள்ளி மாணவா்கள், கிராம பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.
நிகழ்ச்சியில் வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயசீலன், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளா் செந்தில்வடிவு, மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.