மூக்குப்பொடி சித்தா் குருபூஜை விழா

திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு சித்தியடைந்த மூக்குப்பொடி சித்தரின் முதலாம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை (நவ.28) நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு சித்தியடைந்த மூக்குப்பொடி சித்தரின் முதலாம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை (நவ.28) நடைபெறுகிறது.

40 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த மூக்குப்பொடி சித்தா், பக்தா்களுக்கு அருளாசி வழங்கி வந்தாா். 2018 டிசம்பரில் சித்தியமடைந்தாா். இதையடுத்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வாயுலிங்கம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு மூக்குப்பொடி சித்தா் பெயரில் ஆஸ்ரமம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு, மூக்குப்பொடி சித்தரின் முதலாம் ஆண்டு குரு பூஜை விழா வியாழக்கிழமை (நவ.28) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

குரு பூஜை, மகேஷ்வர பூஜையில் பக்தா்கள் கலந்து கொள்ளலாம் என்று மூக்குப்பொடி சாமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com