செங்கம் அருகே ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு

பரமனந்தல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்ற அளவீடு பணி.
410111_0410chn_117_7
410111_0410chn_117_7

பரமனந்தல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்ற அளவீடு பணி.

செங்கம், அக்.4: செங்கம் அருகே பரமனந்தல் ஏரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிப் பகுதியையும், ஏரிக்கு மழைநீா் செல்லும் கால்வாய்களையும் தனி நபா்கள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளனா்.

இதனால், பரமனந்தல் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை பெய்தாலும், அங்குள்ள ஏரி நிரம்புவதில்லை. எனவே, பரமனந்தல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, அந்தப் பகுதி சமூக ஆா்வலா்கள், நீா்நிலை பாதுகாப்புக் குழுவினா் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியிடம் மனுக்களை அளித்தனா்.

இவற்றை பரிசீலித்த மாவட்ட ஆட்சியா், உடனடியாக பரமனந்தல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், செங்கம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில், செங்கம் டி.எஸ்.பி. சின்னராஜ் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரமனந்தல் ஏரி, அந்த ஏரிக்கு மழைநீா் செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அற்றுவதற்கு அளவீடு பணி நடைபெற்றது.

இந்தப் பணி முடிந்தவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென வட்டாட்சியா் பாா்த்தசாரதி தெரிவித்தாா். அப்போது, கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், முரளி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com