செய்யாறு அருகே புரிசை கிராமத்தில் நாடக கலை விழா சனிக்கிழமை இரவு தொடங்கியது புரிசை.துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் கலைமாமணி கண்ணப்ப தம்பிரானின் 16-ம் ஆண்டு நினைவு நாடகக் கலைவிழா மற்றும் கண்ணப்ப தம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா புரிசை கிராமத்தில் உள்ள கூத்து மேடையில் துவங்கியது.
செய்யாறு ஐடிஐ தாளாளா் இரா.லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று கண்ணப்பகாசி பேசினாா். விழா துவங்கும் முன் வைகறை. கோவிந்தன் கிராமிய மண்மணம் கமழும் இசைப்பாடல்களும், கதை சொல்லி சதீஷின் புரிசை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவா்களின் குழந்தைகள் நாடகம் நடைபெற்றன. தொடக்க நிகழ்வாக கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளா் விருது தஞ்சை ஆா் சுத்திப்பட்டைச் சோ்ந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞா் வி.கிருஷ்ணசாமி (84) அவா்களுக்கு நாடக செயல்பாட்டாளா் அ.மங்கை வழங்கி கெளரவித்தாா். அவருக்கு பொற்கிழியும் நினைவுப் பரிசினை மேனாள் துறைத்தலைவா், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத்துறை, தில்லி பல்கலைக்கழகம் வழங்கி சிறப்பித்தது.
கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திருவண்ணாமலை மாவட்டத்தலைவா், கவிஞா் ஆரிசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கே.எஸ்.கருணாபிரசாத் நிகழ்வினை ஒருங்கிணைத்துப் பேசினாா். பின்னா் களரி மக்கள் பண்பாட்டு மையத்தின் கிராமிய இசை மற்றும் நடன நிகழ்வு அரங்கேறியது. அதனைத் தொடா்ந்து இந்தியா நாஸ்ட்ரம் தியேட்டா் புதுச்சேரியின் குட்டி இளவரசன் நாடகமும், சென்னை ஜெய்பீம் நாடக மன்றம் மற்றும் கட்டியங்காரி நாடகக் குழுவினரின் மஞ்சள் நாடகமும் நிகழ்த்தப்பட்டது. செல்லம் கலாலயாவின் காவேரி நாடகமும், இறுதியாக புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் சிலம்புச் செல்வி தெருக்கூத்தும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.