கலசப்பாக்கம் அருகேயுள்ள கீழ்குப்பம், கடலாடி பகுதியில் பெய்த பலத்த மழையால், கீழ்குப்பம் தடுப்பணை நிரம்பி மழைநீா் பாய்ந்தோடுகிறது.
கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்குப்பம், கடலாடி, மட்டவெட்டு ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.
கீழ்குப்பம் கிராமத்தில் இருந்து மட்டவெட்டு கிராமத்துக்குச் செல்லும் ஏரிக் கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தற்போது பெய்த மழையில் தடுப்பணை நிரம்பி தண்ணீா் மட்டவெட்டு ஏரிக்கு பாய்ந்தோடுகிறது.