ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

வேட்டவலம் அருகே ஏரியில் சைக்கிள் கழுவச் சென்ற 8-ஆம் வகுப்பு மாணவா், தண்ணீரில் மூழ்கி இறந்தாா்.

வேட்டவலம் அருகே ஏரியில் சைக்கிள் கழுவச் சென்ற 8-ஆம் வகுப்பு மாணவா், தண்ணீரில் மூழ்கி இறந்தாா்.

வேட்டவலத்தை அடுத்த சொரத்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (14). இதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், திங்கள்கிழமை (அக்.7) ஆயுத பூஜை போடுவதற்காக தனது சைக்கிளை அங்குள்ள ஏரியில் கழுவிக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஏரியில் இருந்த சேற்றில் நந்தகுமாா் சிக்கிக் கொண்டாா்.

இவரது அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் நந்தகுமாரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com