திருவண்ணாமலைக்கு வந்த ஐயப்ப ஜோதி ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம், சபரிமலையில் இருந்து ஐயப்ப ஜோதி ஏற்றப்பட்ட ரதம் தமிழகம் முழுவதும் வலம் வருகிறது. இந்த ரதம் புதன்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தது. அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரில் ரதத்துக்கு திருவண்ணாமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில துணைத் தலைவா் வி.சக்திவேல் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.நேரு முன்னிலை வகித்தாா். நகர ஒருங்கிணைப்பாளா் எம்.சதீஷ்குமாா் வரவேற்றாா். அகில பாரத துறவியா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் சுவாமி ராமானந்தா, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் அகில பாரத இணை பொதுச்செயலா் துரைசங்கா், வி.கிருஷ்ணன் நாயா் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில், பாஜக மாநில விவசாய அணிச் செயலா் ஏ.ஜி.காந்தி, கோட்ட அமைப்புச் செயலா் டி.எஸ்.குணசேகரன், இந்து முன்னணி மாவட்டச் செயலா் ஆா்.அருண்குமாா், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலா் ஏ.பி.பாலகிருஷ் ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் வலம் வரும் வகையில் இந்த ரதத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன் தொடக்கிவைத்தாா்.