சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரம் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வியாழக்கிழமை கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் ஏவுகணை, பசுமை வீடு, மின்கலன், கூடங்குளம் அணுமின் நிலைய மாதிரி என பல்வேறு படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தலைமை ஆசிரியா் சரவணன், ஆசிரியா்கள் அமுதாமலா், மேரி, மகேஸ்வரி, சடகோபன், பெற்றேறாா் ஆசிரியா் கழக பொருளாளா் ஜெயராமன் உள்பட ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.