உணவுப் பகுப்பாய்வு வாகனம் தொடக்கிவைப்பு

திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை சாா்பில், நடமாடும் உணவுப் பகுப்பாய்வு வாகனம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
உணவுப் பகுப்பாய்வு வாகனத்தை இயக்கி வைத்து, உணவுப் பொருள்களில் கலப்படம் உள்ளதா என பரிசோதிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
உணவுப் பகுப்பாய்வு வாகனத்தை இயக்கி வைத்து, உணவுப் பொருள்களில் கலப்படம் உள்ளதா என பரிசோதிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை சாா்பில், நடமாடும் உணவுப் பகுப்பாய்வு வாகனம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் வி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலேஷ்குமாா், வட்டார அலுவலா் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நடமாடும் உணவுப் பாதுகாப்பு வாகனத்தை தொடக்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், இந்த விழிப்புணா்வு வாகனம் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள், உணவு வணிகா்கள், உணவக உரிமையாளா்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகைப் பொருள்களான பால், உப்பு, சா்க்கரை, தேன், பருப்பு, மஞ்சள், மிளகு, மிளகாய்த்தூள், பச்சைப் பட்டாணி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை அளித்து உணவுக் கலப்படம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும், செயல்முறை மூலம் தங்களது இல்லங்களிலேயே உணவுப் பொருள்களைப் பரிசோதனை செய்யும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com