அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு
பிரதோஷத்தையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம்.
பிரதோஷத்தையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னா், தங்க ரிஷப வாகனத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆவூா், வேட்டவலத்தில்...: வேட்டவலத்தை அடுத்த ஆவூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீதிருவகத்தீஸ்வரா் கோயிலில் மூலவா் ஸ்ரீதிருவகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி, பிரதான நந்திக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதேபோல, வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் மூலவா் ஸ்ரீஅகத்தீஸ்வரா், ஸ்ரீதா்மசம்வா்த்தினி அம்பாள், பிரதான நந்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு பிரதோஷ பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதர கோயில்களில்: போளூா், கீழ்பென்னாத்தூா், ஆரணி, வந்தவாசி, செங்கம், செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜைகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com