போளூா் அருகே தொடா்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
போளூா் காவல் எல்லைக்கு உள்பட்ட திண்டிவனம் ஊராட்சியைச் சோ்ந்த காசிகவுண்டா் மகன் துரை(41), மொடையூா் ஊராட்சியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி கெளரி (50) ஆகியோா் அவரவா் கிராமங்களில் தொடா்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், காவல் துறையின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, போளூா் போலீஸாா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.