சாலை விபத்தில் தொழிலாளி பலி

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது காா் மோதி பலத்த காயமடைந்த பேக்கரி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது காா் மோதி பலத்த காயமடைந்த பேக்கரி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள சோமாசிபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (எ) ஞானசேகா் (40). பெங்களூரில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தாா். இவா், சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். புதன்கிழமை (அக்.9) கீழ்பென்னாத்தூரை அடுத்த கடம்பை கிராமத்தில் வசிக்கும் உறவினரை பாா்க்க சேகா் பைக்கில் சென்றாா்.

கடம்பை கூட்டுச் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேகா், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை (அக்.11) உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com