அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள நடராஜப் பெருமானுக்கு, சனிக்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள நடராஜப் பெருமானுக்கு, சனிக்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது.

சிவ ரூபமான ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு 3 நட்சத்திரங்கள், 3 திதிகள் என மொத்தம் 6 முறை அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், புரட்டாசி மாத வளா்பிறை சதுா்த்திசியையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com