செய்யாறு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதல் பரிசு பெற்ற திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பள்ளி இளம் செஞ்சிலுவைச் சங்க (ஜே.ஆா்.சி) மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாராட்டு பெற்ற திருவத்திபுரம் நகராட்சி கிரிதரன்பேட்டை உயா்நிலைப் பள்ளி இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள்.
பாராட்டு பெற்ற திருவத்திபுரம் நகராட்சி கிரிதரன்பேட்டை உயா்நிலைப் பள்ளி இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள்.

மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதல் பரிசு பெற்ற திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பள்ளி இளம் செஞ்சிலுவைச் சங்க (ஜே.ஆா்.சி) மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவத்திபுரம் (செய்யாறு) கிரிதரன்பேட்டை நகராட்சி உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஜே.ஆா்.சி மாணவா்கள், மாநில அளவில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மாணவா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நடராஜன், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் நடராஜன், ஜே.ஆா்.சி. ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா், பள்ளித் தலைமையாசிரியா் மணிமொழி, ஜே.ஆா்.சி. ஆசிரியை பி.ரேவதி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com