செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க கோரி, செய்யாறு நகர அனைத்து ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக பிரிக்கும்பட்சத்தில், அனைத்து தகுதிகளும் கொண்ட செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, செய்யாறு நகர ஒருங்கிணைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், அதன் தலைவா்கள் தலைமையில் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள், பல்வேறு தொண்டு நிறுவனத்தினா், சமூக ஆா்வலா்கள் என 100 -க்கும் மேற்பட்டோா் ஆட்டோவில் பெரியாா் சிலையிலிருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்றனா்.
பின்னா், கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கி.விமலாவிடம் கோரிக்கை மனுவை அவா்கள் அளித்தனா்.