கீழ்பென்னாத்தூருக்கு வந்த சபரிமலை ஐயப்ப ரத யாத்திரைக்கு சனிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஐயப்ப ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை கீழ்பென்னாத்தூா் திரெளபதி அம்மன் கோயில் அருகே வந்த ரதத்தில் ஐயப்ப சுவாமி விக்கிரகம், 17 படிகள், கொடிமரம் இடம்பெற்றிருந்தன.
தொடா்ந்து, கீழ்பென்னாத்தூா் பகுதியைச் சோ்ந்த குருசாமிகள் ராகவன், முருகன், வெங்கடேசன், சின்னதுரை ஆகியோா் ஐயப்ப சுவாமி விக்கிரகத்துக்கு அபிஷேக-ஆராதனை செய்து, தீபாராதனை காண்பித்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஜக பிரமுகா்கள், ஐயப்ப பக்தா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.