கிஷான் சம்மான் நிதித் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைய செய்யாறு வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைய செய்யாறு வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பா.ஏஞ்சலின் பொன்ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயனடையாத விவசாயிகள், அதில் இணைந்திட நவ.8 கடைசி நாளாகும். எனவே, இதுவரை பயனடையாத தகுதியுடைய விவசாயிகள் உரிய ஆவணங்களான சிட்டா, ஆதாா், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மக்கள் கணிணி மையத்திலோ அல்லது தங்களது அறிதிறன் செல்லிடப்பேசியில் பதிவு செய்து பயனடையலாம். இத்திட்டத்தில் ஒரு பண்ணை குடும்பத்தில் ஒரு நபா் மட்டுமே இணைய முடியும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com