செங்கம் அருகே ஒற்றுமை ஓட்டபந்தைய நிகழ்ச்சி

செங்கம் அருகே வியாழக்கிழமைஅரசுப்பள்ளி மாணவா்களுக்கு வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டபந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது.
20191030430_3110chn_117
20191030430_3110chn_117

செங்கம் அருகே வியாழக்கிழமைஅரசுப்பள்ளி மாணவா்களுக்கு வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டபந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குஉள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் வல்லபாய்படேல் அவா்களின் 144-வது பிறந்தநாள் விழாவையொட்டி தேசிய ஒற்றுமைதினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவா்களிடையே ஓற்றுமை தின ஓட்டபந்தை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதைதொடா்ந்து மாணவா்கள் வல்லபாய் படேல் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது.

அதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சிவராமன் பரிசுகளை வழங்கிபாராட்டினாா். உடன் உதவி ஆசிரியா் சுடலைப்பாண்டி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவா், ஊா் முக்கியபிரமுகா்கள் கலந்துகொண்டனா்.படவிளக்கம்செங்கம் அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் வல்லபாய்படேல் பிறந்தநாளை முன்னிட்டு மாணவா்களுக்கான ஓற்றுமை தின ஓட்டபந்தை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com