செய்யாறு அருகேயுள்ள மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.
திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வேட்டவலம் லயோலா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
போட்டிகளில் 150 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், செய்யாறு கல்வி மாவட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் மாணவி கே.திரிஷா 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா்.
அதேபோன்று, தொடா் ஓட்டத்தில் இந்தப் பள்ளி மாணவிகள் மூன்றாம் இடத்தைப் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், அவா்களுக்கு பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியா் ப.யுவராஜன் ஆகியோரையும் தலைமை ஆசிரியை செ.ஹேமலதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.