திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 151 போ் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்; காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான தீரஜ்குமாா் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான தீரஜ்குமாா் கலந்துகொண்டு அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 75 இடங்களில் மழை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து தகவல் அளிப்பதற்காக மாவட்டத்தில் 699 ஆண்கள், 386 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அதிகம் பாதிப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நிகழாண்டு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 151 போ் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாா்.