பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

செய்யாறை அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மனைவி ராணி (60). இவா் தனது மகன் பன்னீா்செல்வத்துடன் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் செல்வதற்காக பைக்கில் சென்றாா்.

வெம்பாக்கம்-அப்துல்லாபுரம் சாலையில் பில்லாந்தாங்கல் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, மழை பெய்து கொண்டிருந்ததால் பைக்கில் இருந்து ராணி தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் ஷாகின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com