புதுப்பாளையம் ஒன்றியம், கொட்டகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு, ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கொட்டகுளம் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சி.பி.பழநி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பள்ளி மாணவர்களிடம் வழங்கி, சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி பேசினார்.
போளூர் கல்வி மாவட்ட அலுவலர் கருணாகரன், ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.
இதில், செங்கம் கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட இறையூர், பெரியகுளம், கெங்கம்பட்டு, செங்கம் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.