செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இக்கல்லூரியில் 1991 - 94ஆம் கல்வியாண்டில் இயற்பியல் துறையில் சுமார் 35 மாணவர்கள் பயின்றதாகத் தெரிகிறது.
முன்னாள் மாணவர்களான இவர்களில் 25 பேர் தங்களது குடும்பத்தோடு ஒன்று கூடி மகிழ்ந்து ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் அவர்கள் செய்யாறு சிகரம் பவுண்டேசன் டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அனைத்து முன்னாள் மாணவர்கள் அமைப்பின் ஆசிரியர்கள் திருவாசகம், முனுசாமி ஆகியோர் செய்திருந்தனர்.