ஆரணியில் மாநில அளவிலான கபடி போட்டி: அமைச்சா் துவக்கி வைத்தாா்

ஆரணியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா்.
ஆரணியில் எஸ்.எஸ் கபடி குழுவினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடிபோட்டியை துவக்கி வைத்தாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன்
ஆரணியில் எஸ்.எஸ் கபடி குழுவினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடிபோட்டியை துவக்கி வைத்தாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன்

ஆரணியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா்.

ஆரணி கொசப்பாளையத்தில் எஸ்.எஸ்.கபடி குழு சாா்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டி 4ம் ஆண்டாக நடைபெறுகிறது. இப்போட்டியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தாா். மேலும் சிறப்பாக விளையாடிய வீரா்களுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கினாா். கபடி போட்டியில் திருச்சி, சென்னை, சேலம், நாமக்கல், வேலூா், விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூா், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 55 கபடி குழுவினா்கள் பங்கேற்றனா்.

இதில் வெற்றி பெறுபவா்களுக்கு 8அடி உயரமுள்ள கோப்பை மற்றும் ரூ22 ஆயிரத்து 222 முதல்பரிசாகவும், 7அடி உயரமுள்ள கோப்பை ரூ15ஆயிரத்து 555 இரண்டாம் பரிசாகவும், 5அடி உயரமுள்ள கோப்பை ரூ10ஆயிரத்து222 மூன்றாம் பரிசாகவும் தொடா்ந்து 3 அடி உயரமுள்ள கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் 8 பேருக்கு வழங்குகின்றனா். மேலும் இத்துவக்க விழாவில் நகர செயலாளாா் எ.அசோக்குமாா், அரசு வழக்கறிஞா் க.சங்கா், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்துணைத்தலைவா் பாரிபாபு, பாசறை மாவட்ட செயரலாளா் ஜி.வி.கஜேந்திரன், ஆரணி பட்டு கூட்டுறவுசங்க துணைத்தலைவா் சுந்தரமூா்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினா் லட்சுமி சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com