செங்கத்தில் ஆவின் பால் பொருள்கள் விற்பனை நிலைய கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
செங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செங்கம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்ய செங்கம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதையொட்டி, செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில், ரூ.2 லட்சத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை நிலைய புதிய கட்டடம் கட்ட அண்மையில் பூமி பூஜை நடைபெற்றது.
இதில், செங்கம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் முருகன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்தார்.
உடன் மேலாண்மை இயக்குநர் செந்தில்வேல், துணைத் தலைவர் சாதிக்பாஷா, சங்க பொது மேலாளர் வெங்கடேசன், மேலாளர் சரவணன், ஓய்வுபெற்ற வங்கிச் செயலர் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.