மகளிர் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வளர்ச்சி குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வளர்ச்சி குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிருக்கு அளிக்கப்படும் இந்த 2 நாள் பயிற்சியில் அடிஅண்ணாமலை, ஆடையூர், காட்டாம்பூண்டி, ஆனானந்தல், அண்டம்பள்ளம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளைச் சேர்ந்த பெண்கள் 54 பேர் கலந்து கொண்டனர். 
முகாமிற்கு ஆணையர் தி.அண்ணாதுரை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இரா.ஆனந்தன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார்.  உதவி இயக்குநர் (ஓய்வு) வி.வேணுகோபால் மகளிருக்கு பயிற்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com