காலமானார் கே.குமரேசன்

செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக் குழு உறுப்பினரான கே.குமரேசன் சனிக்கிழமை காலமானார்.


செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக் குழு உறுப்பினரான கே.குமரேசன் சனிக்கிழமை காலமானார்.
செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கே.குமரேசன். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும், செங்கம் பகுதியின் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த கே.குமரேசன் சனிக்கிழமை காலமானார். அவரது உடல் சென்னசமுத்திரத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கே.குமரேசன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.29) காலை 11 மணியளவில் சென்னசமுத்திரம் கிராமத்தில் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com