கலசப்பாக்கம் ஊராட்சியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலர் ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் அ.சுப்பிரமணியன் வரவேற்றார்.
திமுக தெற்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு உறுப்பினர் சேர்க்கையைத் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலர் அ.சிவக்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, கலசப்பாக்கம் வட்டாரத்தைச் சேர்ந்த தேமுதிக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 150 பேர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.