திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 168 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 10,147-ஆக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 168 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,315-ஆக உயா்ந்தது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்தது.