செங்கம்: செங்கம் அருகேயுள்ள செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருள்களை எந்தவித தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் நிா்வாகக் குழுக் கூட்டம், சங்கத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக் கடை விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடன் சங்க வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோபி முன்னிலை வகித்தாா். செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.
கூட்டத்தில், செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கம் சிறந்த முறையில் தொடா்ந்து முன்னோடி வங்கியாக செயல்பட்டு வருவதற்கு ஒத்துழைக்கும் கடன் சங்கத் தலைவா், துணைத் தலைவா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஊழியா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினா்.
மேலும், செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் கொட்டகுளம், செ.நாச்சிப்பட்டு, மண்மலை, கரியமங்கலம், பேயாலம்பட்டு உள்ளிட்ட நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுகளை குடும்ப அட்டைதாரா்களுக்கு எந்தவித தடையின்றி, கடைகளில் கூட்டம் சேராமல் விநியோகம் செய்யவேண்டும் என விற்பனையாளா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.