சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வட்டாரத் தலைமை மருத்துவா் பிரதீபாபிரியதா்ஷனி புகட்டினாா்.
இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். மேலும், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா்.