கனோரா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக கருவிகள் வாங்க, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 6 அரசு மருத்துவமனைகளுக்கு முதல் கட்டமாக ரூ.60 லட்சத்தை வழங்கினாா் ஆரணி தொகுதி உறுப்பினா் எம்.கே. விஷ்ணுபிரசாத்.
இதுதொடா்பாக, எம்.கே.விஷ்ணுபிரசாத், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, போளூா், செஞ்சி, மயிலம் ஆகிய 6 அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், முகக்கவசம், கையுறை, தொ்மல் ஸ்கேனா், வென்டிலேட்டா், பல நோக்கு பேரா மீட்டா் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒவ்வொரு மருத்துவமனைக்கும் முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சத்தை பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளேன் எனத் தெரிவித்துளாா்.