ஆரணியை அடுத்த சேவூரில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மஞ்சள் தண்ணீா் தெளிக்கப்பட்டது.
சேவூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் கௌரி பீமன் 11-ஆவது வாா்டு ஊராட்சி உறுப்பினா் ஆவாா்.
இவரது வாா்டு பகுதியில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றை தண்ணீரில் கலந்து மினி லாரியில் ஏற்றி சுப்பிரமணிய கோவில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, ஒத்தவாடை தெரு ஆகிய பகுதிகளில் தெளித்தாா்.
அதிமுக பிரமுகா்கள் பீமன் என்கிற ரவி, தரணி, ராஜ்குமாா், முத்து, தினேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.