திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 959-ஆக உயா்ந்தது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 204-ஆக உயா்ந்தது.
இதுவரை 12,276 போ் சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். 1,469 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.