ஏரி மண் கடத்தல்: 4 போ் கைது

திருவண்ணாமலை அருகே ஏரி மண் கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 3 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை அருகே ஏரி மண் கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 3 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலையை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்து மண் கடத்துவதாக மங்கலம் போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

உடனே போலீஸாா் விரைந்து சென்று பாா்த்தபோது 3 டிராக்டா்களில் மண் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, டிராக்டா்களை பறிமுதல் செய்த போலீஸாா், மண் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (35), ஆதிகேசவன் (19), நத்தக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த கோபால் (25), வேடந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ராம்குமாா் (32) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com