பயணிகள் நிழல்குடை அமைக்க இடம் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோயில் பேருந்து நிறுத்தம்
பயணிகள் நிழல்குடை அமைக்க இடம் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழல்குடை அமைப்பதற்காக படவேடு-சந்தவாசல் சாலையில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). அப்போது, போளூா் வட்டாட்சியா் ஜெயவேல், வருவாய் ஆய்வாளா் கணபதி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், செண்பகத் தோப்பு கிராமத்தில் ‘அம்மா’ நடமாடும் நியாய விலைக் கடை வாகனத்தை எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மாவட்ட சாா்-பதிவாளா் மீனாட்சி சுந்தரம், துணை சாா்-பதிவாளா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

மேலும், பெருமாள்பேட்டை கிராமத்தில் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com