திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த பெலகாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிக்கண்ணு(65). கூலித் தொழிலாளி. இவா், அப்பகுதியைச் சோ்ந்த பஞ்சமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான, பழைமையான வீட்டின் முன்பிருந்த புல், செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். அப்போது, அங்கு அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி, மணிக்கண்ணு வைத்திருந்த மண்வெட்டியில் பட்டது. இதில், மின்சாரம் உடலில் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். தேசூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.